மருந்து.கொம் உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது..!
கோக்சுரா & அஸ்வகந்தா பிளஸ் (Gokshura & Ashwaganda Plus) வரைவில் விந்து வெளிப்படுதலை தடுக்க இம்மூலிகை மருந்து உதவும்.
கடுமையான ஒற்றைத் தலைவலி நோயாளியின் நோய்க்குறிப்பு கடுமையான ஒற்றைத் தலைவலி நோயாளியின் நோய
உடல் (பொது) > உடலில் நஞ்சகற்றும் பற்று
உடலில் நஞ்சகற்றும் பற்று - ‘பச் இற்’ தயாரிப்பு நஞ்சகற்றல் - நோ நீக்கி – அழகுபடுத்தல் - நலம் பெற்ற உணர்வு மிகவும் பழமையான முறைமையும், நவீன கால விஞ்ஞான விளக்கத்தையும் கொண்டுள்ள ‘பச் இற்’ தயாரிப்பு முறையானது, உடல் நலத்திற்கும், ஆரோக்கியத்திற்குமான மேற்கு கிழக்கு தேசங்களில் பயன்படுத்தப்படும் முறைகளின் பன்மடங்கு வலுச்சேர்க்கும் ஒரு சேர்மானமாகும். முழுக்குடும்பத்திற்கும் ஏற்றதான ஒட்டிவிடும் வகையான மருந்தானது நிரூபணமான அகுபஞ்சர் அல்லது றிவிலெக்ஸ்சோலோஜி, பார் இன்பிறாறெட் (ஐ.எவ்.ஆர்) எனேஜி, கிறிஸ்ரல் கீலிங் போன்ற நோய் நீக்கும் வழி முறைகளில் காணப்படும் மூலக்கருத்துக்களினதும், நடைமுறைப் பயன்பாடுகளினதும், மர அமிலம் (வூட் வினிகர்) படிகங்கள், தாவர முக்கிய எண்ணை (எசென்சியல் ஒயில்) ஆகியவற்றின் சேர்மானங்களின் கூட்டுத்தயாரிப்பான ‘பச் இற்’ உலகில் முதலாவது நஞ்சகற்றும் பற்று முறை மருந்தாகும். உலகிலேயே முதன் முறையாக தயாரிக்கப்பட்டிருக்கும் ‘உடல் நஞ்சகற்றம் பற்று’ (டிரொக்ஸ் பச்), நீங்கள் நன்கு நித்திரை செய்யும்போது தான் வேலை செய்கிறது. நித்திரைக்குப்போகு முன்னர் பாதத்தில் ஒட்டி விட்டு, துயில் நீங்கி எழுந்திருக்கும் போது உடல் லேசானதாகவும், புதுவலுவும் புத்துணர்வும் ஊட்டும், அன்றைய நாளை நன்றே ஆரம்பிக்க வழி செய்கின்றது. நீங்கள் நித்திரை செய்யும் பொழுதிலேயே ‘நஞ்சகற்றும் பற்று’ வேலை செய்கின்றது. இரவில் ஒட்டிய பற்றை பாதத்திலிருந்து காலையில் உரித்துப்பார்க்கும் பொழுது உடலிலிருந்து உறிஞ்சி இழுக்கப்பட்ட நஞ்சுப் பதார்த்தங்களைக் காணலாம். இவைதான் உங்கள் உடல் நலனைப் பாதிப்பதோடு உங்களின் மந்த நிலைக்கும் காரணமாகின்றன. இந்த ‘நஞ்சகற்றும் பற்றை’ 5 – 10 நாட்களுக்கு தொடர்ச்சியாக பயன்படுத்திவரும் பொழுது உடலின் நோவையும், குத்து வேதனையும் தணித்து, மனவழுத்தத்தையும் (ஸ்றெஸ்) மந்த நிலையையும் அகற்றி, உடலின் நலன் நிலையை மேன்மைப்படுத்துகின்றது. மேலும், நலமான உடல் நிலையைப் பேணுவதற்கு முழுக்குடும்ப அங்கத்தினருக்குமே பயன்படக்கூடியதாகும். குழந்தை, பெரியவர், ஆண், பெண் என்னும் பேதமற்று பயன்படுத்தப்படக்கூடிய இந்த ‘நஞ்சகற்றும் பற்று’, உடல் நலத்தைப் பேணுவதில், மிகவும் இலகுவாக பயன்படுத்தக் கூடிய முறையில் உதவுகின்றது. உடலில் நஞ்சகற்றுவதற்காக சமகாலத்தில் காணப்படும் பெருந்தொகையான குறைநிரப்பிகள், சாப்பாட்டு முறைகள் போன்றவற்றுடன் ஒப்படும்பொழுது ‘நஞ்சகற்றும் பற்று’ (பச் இற்) உங்களை நித்திரை செய்ய மட்டுமே எதிர்பார்க்கின்றது. ‘நஞ்சகற்றும் பற்று’ உடன் நித்திரை செய்யுங்கள்– புத்துணர்வுடன் எழுந்திருப்பீர்கள் - அவ்வளவு இலகுவானது. ‘நஞ்சகற்றும் பற்று’ (பச் இற்) தயாரிப்பில் ‘பைறோலிஜினியஸ்’ அமிலம் என்னும் தூய, மர அமிலம் (பியுறிவைட் வூட் வினிகர்), சில தெரிவு செய்யப்பட்ட படிக்கற்களின் (கிறிஸ்ரல்) ஆகியவன அதியுயர் சேர்மானவலுவைத்தரும் வகையில் சேர்மானம் செய்யப்பட்டுள்ளது. மர அமிலங்களிலின் தரம் அவை தயாரிக்கப்படும் மரங்களைப் பொறுத்து வேறுபடுகின்றது. ‘பச் இற்’ தயாரிப்பில், மிக உயர்தர, தூய மர அமிலம் சோதனைக்குப் பின்பே பயன்படுத்தப்படுகின்றது. இந்தப் பற்று சேதனப் பொருட்களை மட்டுமே கொண்டுள்ளது. ‘பச் இற்’ பாதுகாப்பானது, பாவனையை வைத்தியர்கள் சிபார்சு செய்கிறார்கள். பின்வரும் சந்தர்ப்பங்களில் ‘பச் இற்’ பயன்படுத்தப்படலாம். - இலகுவான நஞ்சு நீக்கில் முறை. - நோஇ குத்து, உழைவிலிருந்து நீங்க. - உடல் குருதிச் சுற்றோட்டத்தை அதிகரிக்க. - உடல் நோயிலிருந்து நீங்க - நல்ல நித்திரையும்இ உடல் ஓய்வையும் ஊக்குவிக்க. - உடல் மீள வலுப்பெற்று, புத்துணர்வு பெற. - உடல் காயங்களிலிருந்து குணம் பெற்றவர. ‘பச் இற்’ எவ்வாறு வேலை செய்கின்றது? இந்த பற்று பல மாவாக்கப்பட்ட மூலப்பொருட்களைக் கொண்டுள்ளது. ‘பச் இற்’ பற்றை தோலில் ஒட்டி சில மணித்தியாலங்களுக்கு விடும் பொழுது, ஒட்டிய இடத்திற்கு இரத்த ஓட்டத்தை அதிகரித்து நஞ்சகற்றலைச் செய்கின்றது. வழமையில் பாதத்திலேயே ‘பச் இற்’ ஒட்டப்படுகின்றது. உடலின் ஏனைய நோ அல்லது நலக்குறைவு பட்ட இடங்களிலும் (உதாரணமாக தோட்பட்டை, முதுகு, முழங்கால், கெண்டைக்கால், முழங்கை) பயன்படுத்தலாம். உடலில் காணப்படும் முக்கியமான உச்சப் புள்ளிகளை (மெறிடியன்ற் பொயின்ற்ஸ்) உசுப்பி விடுவதன் மூலம் ஏனைய அங்கங்களையும் உசுப்பிவிடலாம் என்னும் தத்துவத்தில் செயற்படுகிறது. ‘பச் இற்’றில் உள்ள சில மூலப்பொருட்கள் தொலைவு தூர தனி நிறக்கதிர் தாக்கம் (பார் இன்பிறாறெட் அவெக்ற்) என்னும் தத்துவத்தில் செயற்படுகின்றது. பார் இன்பிறாறெட் அவெக்ற் ஜப்பான், சீனா, அமெரிக்கா, சுவீடன் போன்ற நாடுகளில் தசை சுளுக்கு, பிடிப்பு, தசை இழுபடுதல், வெளிப்புற குருதிச் சுற்றோட்ட நோய்கள், மூட்டு வலி (ஆத்திரைரிஸ்), இறுகிய தோட்பட்டை, மாதவிடாய நேர நோவு போன்ற பல நோய் நிலைகளில் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. சக்கர நாற்காலியில் இருப்பவர்களுக்கு கூட ஐ.எவ்.ஆர் முறை இரத்தோட்ட தொகுதியை உசுப்பிவிட 1980ம் ஆண்டு நடைபெற்ற ஆய்வுகளிலின் மூலம் நம்பப்படுகிறது. ‘பச் இற்’ பற்றிய தூய்மை செய்யப்பட்ட, முதிர்ச்சியடைந்த பைறோலிஜினியஸ் அமிலமாவில் 50சதவீதத்தைக் கொண்டுள்ளது. இந்த 50சதவீதமான உயர்தர அமிலமே ஐ.எவ்.ஆர் தாக்கத்தை ஏற்படுத்தவல்லது. ‘பச் இற்’இவ்விதமான உயர்தர செயற்திறன் கூடிய மூலப்பொருட்களைக் கொண்டிருப்பதனால் விளைவுகள் நீண்ட காலத்திற்கு நீடிக்ககூடியன. பொதுவாக, இந்த ‘பச் இற்’ இன் தாக்கம், அதனுள்ளடக்கம் முழுவதும் ஈரமாகவரும் வரை இருக்கும். ஒவ்வொரு ‘பச் இற்’ உம் 5கி. மூலப்பொருட்களைக் கொண்டுள்ளது. உறிஞ்சி எடுக்க கூடிய உறையில் உள்ளடக்கப்பட்ட மூலப்பொருள் 7 மணித்தியாலம் வரை வேலை செய்யக்கூடியது. உடலில் நஞ்சுகளையும் ஈரப்பற்றையும் உறிஞ்சி எடுத்தவுடன் ‘பச் இற்’ ஆழ்ந்த மண்ணிறத்தையடைகின்றது. சேர்மான வலுத்தரும் மூலப்பொருட்கள் ‘பச் இற்’றில் ரோர்மலைன், ஜேர்மானியம் ஆகிய படிகமாக்களும் சேர்க்கப்பட்டுள்ளது. எதிர்மறையான படிகத்தின் தாக்கத்தைத் தவிப்பதற்காக மேலும் இவ்விரு படிகங்களும் உடல் நலத்தைப் மேம்படுத்த வல்லன. அணியும் ஆடையில் ரோர்மலைன் சேர்க்கப்பட்டிருக்குமானால் , அது ஆடை அணிந்தவரின் உடல் நலத்தை மேம்படுத்தும். பாவனை முறை உறையில் உள்ளடக்கப்பட்ட ‘பச் இற்’ எடுத்து, பாதத்தில் படுக்கைக்குப் போகு முன் ஒட்டவேண்டும். முதல் முறை பயன்படுத்துவோர் பாதத்தில் ஒட்டுவது நன்மைபயக்கும். பகல் நேரத்தில் பயன்படுத்துவோர் கை அல்லது உடலின் எந்தப் பாகத்திலும் பயன்படுத்தலாம். புண்ணான அல்லது களைத்த தசைகளின் மேலும் ஒட்டிவிடலாம் ஒட்டும் பொழுது நன்றாக தோலில் அழுத்தும்படி இழுத்து ஒட்டிவிட வேண்டும். பாவித்த பின்பு ‘பச் இற்’ ஆழ்ந்த மண்ணிறத்திற்கு மாறியதையும், சற்று ஒட்டும் தன்மை கொண்டதாகவும் இருப்பதைக் காணலாம். புhவனையின் பின்னான நிறமாற்றம், ஆளுக்கு ஆள், உடலில் பாவிக்கப்பட்ட இடம் ஆகியவற்றினால் வேறுபாடடைகிறது. புhவனையின் பின் ஈரமாகவோ அல்லது உலர்வாகவோ இருந்தாலும் அதன் தாக்கம் மாறுபடாது.